வாலிப விருந்து -28
மேகலா பிக்சர்ஸ் சார்பில் 1967ல் வந்த படம் வாலிப விருந்து
அண்ணாவின் கதைக்கு, கலைஞர் வசனம்.இயக்கம் முரசொலி மாறன்
ரவிச்சந்திரன் , பாரதி, சந்திர பாபு ஆகியோர் நடித்திருந்தனர்
ரவிச்சந்திரன் ஒரு வேலையில்லாத இளைஞர்.பக்கத்து வீட்டில் இருப்பவர் பாரதி.இருவருக்கும் எப்போதும் சண்டை, சச்சரவு,பாரதியின் தந்தை பாலையா, தன் சொத்தில் ஒரு பகுதியை தர்ம ஸ்தாபனத்திற்கு செலவிடுவதைத் தடுக்க நினைக்கிறார் அவர் உறவுப்பையன் அசோகன்.தவிர்த்து, பாரதியை மணந்து அனைத்து சொத்துக்களையும் அடைய நினைக்கிறார்.அதனால் பாலையாவை கடத்தி, பாலையா போல இருக்கும் வேறு ஒருவரை வீட்டிற்குள் வர வழைக்கிறார்.இது பாரதிக்குத் தெரியாது.ஆனால், அசோகனின் இந்த சதிசெயல்களை அறிந்த ரவிச்சந்திரன் உண்மையை வெளிக்கொணர்வதுடன்பாரதியையும் மணக்கிறார்.பாலையாவிற்கு இரட்டை வேடம்
ஆர்.சுதர்சனம் இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாடிய <அவன் காதலித்தான்..அவள் ஆதரித்தாள்" பாடலும், டி எம் சௌந்தரராஜன் பாடிய எங்கே என் மனம், வாலிப விருந்து ஆகிய பாடல்களும் ஹிட்
தவிர்த்து, சந்திரபாபு பாடிய, "ஒன்றைக்கண்ணும் டோரியா" அனைவரும் ரசிக்கும் பாடலாக அமைந்தது எனலாம்
No comments:
Post a Comment