Thursday, November 3, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 17 காஞ்சித் தலைவன்



காஞ்சித் தலைவன் - 22

வெளியான ஆண்டு 26-10-1963

எம் ஜி ராமசந்திரன்,எஸ் எஸ் ராஜேந்திரன்,பானுமதி, விஜயகுமாரி,எம் ஆர் ராதா, அசோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கலைஞர், முரசொலி மாறன், ஏ காசிலிங்கம் ஆகியோர் இணைந்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் வெளியான படம் இது.

காஞ்சித் தலைவன் என அண்ணாவைக் குறிப்பதாகக் கூறி, தணிக்கை அதிகாரிகளால் பல காட்சிகள் வெட்டப்பட்டு வந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வில்லை எனலாம்.

கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்பை கலைஞர் ஏற்றார்.இயக்கம் ஏ காசிலிங்கம்

நரசிம்ம பல்லவனாக எம் ஜி ஆர்., பரஞ்சோதியாக எஸ் எஸ் ஆர்., சோழ இளவரசியாக பானுமதி, புலிகேசியாக அசோகன் ஆகியோர் நடித்த்னர்.

கே வி மகாதேவன் இசை.

இப்படத்தில் ஏ எல் ராகவன், எல் ஆர் ஈஸ்வரி பாடிய நீர் மேல் நடக்கலாம் என்று தொடங்கும் பாடலை கலைஞர் எழுதினார்

ஆலங்குடி சோமு எழுதிய மயங்காத மனம் கூட மயங்கும் (பாடியவர் பானுமதி). ஒரு கொடியில் இரு மலர்கள் (பாடியவர் டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா) ஆகிய பாடல்கள் ஹிட்.

அண்ணன் தங்கை பாசத்திற்குச் சவாலான ஒரு பாடல் ...
' ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா...' பாடல் அது சமயம் அனைவரது மனத்தையும் உருக வைத்தது . தமையனின் தன்மானத்திற்கு களங்கம் வரக் கூ
டாது என்ற நிலையில் தங்கை .
கண்கவரும் சிலையே ! காஞ்சி தரும் கலையே ...!! பாடல் ஒரு அற்புத இனிமை

No comments:

Post a Comment