அம்மையப்பன் - 12
அம்மையப்பன் திரைப்படம் வெளியான நாள் - 24-9-1954
அம்மையப்பன் திரைப்படம் பற்றி கலைஞர் கூறுகையில் மூன்று விசித்திரங்களின் விளக்கமே என் கிறார் கலைநயத்தோடு
காதல் புறா - கன்று நாடும் - பசு- மான் தோல் வேங்கை என
முத்தனும் (எஸ் எஸ் ஆர்), முத்தாயியும் (ஜி சகுந்தலா) காதலிக்கிறார்கள்.வேடன் ஒருவன் இவர்களுக்கு வில்லனாக வந்து..இந்த ஜோடிப் புறாக்கள் மீது அம்பெய்தி கொல்லப் பார்க்கிறான்.இடையிலே நூலாடும் தாய்ப்பாசம்.முடிவில் மான் தோல் போர்த்த வேங்கை மாள்கிறது.முத்தனும், முத்தாயியும் இணைகின்றனர்
டி ஆர் பாப்பா இசையமைத்தார்
கதை- வசனம் கலைஞர்.ஏ பீம்சிங்க் இயக்கம்.நேஷனல் புரடக்சன்ஸ் தயாரிப்பு.இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை
(ஆனால் இதே கதையமைப்புடன் கே ஆர் ராமசாமி, சாவித்ரி நடிக்க கண்ணதாசனும், ஏ கே வேலனும் திரைக்கதை வசனம் எழுத , விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் வந்த சுகம் எங்கே என்ற படம் வெற்றி பெற்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்).
.
No comments:
Post a Comment