Sunday, October 30, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 15 தாயில்லாப் பிள்ளை



தாயில்லாப் பிள்ளை - 20

கலைஞரின் கதை வசனத்தில், எல் வி பிரசாத் இயக்கத்தில்..கல்யாண்குமார்,பாலையா நடித்து வந்த படம் தாயில்லாப் பிள்ளை.

வெளியான நாள்  18-8-1961..

பதஞ்சலி சாஸ்திரி மிகவும் ஆசாரமானவர்.இவருக்கு குழ்ந்தை பாக்கியம் இல்லை.இவர் மனைவி இருமுறை கருத்தரித்தும், கரு கலைந்துவிடுகிறது.

மனைவியின் சகோதரர் ஒரு மருத்துவர்.ஆனால், சாஸ்திரிக்கும் அவருக்கும் உறவு சுமுகமாய் இல்லை

இந்நிலையில், சாஸ்திரியின் மனைவி மீண்டும் கருத்தரிக்கிறாள்.அவள்..தன் சகோதரன் மருத்துவ மனைக்குச் சென்று குழந்தை பெறுகிறாள்.ஆனால்..அங்கு அப்போது பிறந்த மற்றொரு குழந்தையின் தாய் இறக்க..பிறந்த குழந்தையையும் அவள் தத்தெடுக்கிறாள்.

ஆனால், இதனால் ஏற்பட்ட குழப்பத்தில்..எது தன் குழந்தை..எது தத்துக் குழந்தை  என சாஸ்திரிக்கு தெரியவில்லை.

தத்துக் குழந்தை இவர் குழந்தையாகவும், இவர் குழந்தை ஒரு ரிக்க்ஷாக்காரனாகவுமாகிறது

ஆனால்..அந்த இருவரும்  சாதி, மதங்களை உடைத்தெறிகின்றனர்

கே வி மகாதேவன் இசையில் சூலமங்களம் ராஜலட்சுமி பாடிய "சின்னச் சின்ன ஊரணியாம்".ஏ எல் ராகவன் பாடிய "காலம் மாறுது".ஏ எல் ராகவன் பாடிய "கடவுளும் நானும் ஒரு ஜாதி".பி பி ஸ்ரீனிவாஸ் ,ஜமுனாராணி பாணி பாடிய படிக்க வேண்டும் புதிய பாடம் பாடலும் இனிமை

No comments:

Post a Comment